Sunday, November 01, 2009

அழகுத்தாய் வாழ்த்து!

மரம் மலை நிலம் அலை
கடல் நதி கதிர் மதி
இயற்கையின் வளம் உணர்ந்து
இயற்றினேன் கவி புனைந்து

அத்துடன் நான் நிற்கவில்லை
என் திறனும் குன்றவில்லை

பாரதிக்கு ஒரு கவிதை
ஏழைப் பாமரனுக்கு ஒரு கவிதை
படைத்தவனுக்கொரு கவிதை
ஈன்று எடுத்தவளுக்கொரு கவிதை

இளமைக்கு ஒரு கவிதை
சிலர் மடமைக்கு ஒரு கவிதை
மண்ணுக்கு ஒரு கவிதை
முறைப் பெண்ணுக்கு ஒரு கவிதை

இத்தனையும் எழுதிவிட்டேன்
உனைமட்டும் மறந்துவிட்டேன்

பதினெட்டாம் அகவையில் பிடித்ததென்னை பித்து
இன்று உன் வயதோ நிற்கிறததை இரட்டித்து
உன் வயது மட்டும் இரட்டிக்கவில்லை
உன் மீது நான் கொண்ட நேசமும் தான்

அழகின் அகாராதியே
வாழிய நீ பல்லாண்டு!

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home