Wednesday, November 04, 2009

உவகை தந்த உவமை

நூற்றுக்கணக்கில் கவியெழுதி ஆயிற்று
ஒற்றை உவமை சொந்தத்தில் தோன்றவில்லை

நிலவைப்போல் தேய்கிறாள் என்றேன்
மலரைப்போல் மணக்கிறாள் என்றேன்
ரோஜாப்பூ இதழ்கள் என்றேன்
மத்தாப்புச் சிரிப்பு என்றேன்

ஆயிரம் கவிகள் பல்லாயிரம் தடவை
சொல்லி அலுத்த உவமைகள் அன்றோ?

முதன்முதற் சந்திப்பில் என்னையே நான் மறந்து
சுயமான உவமையொன்றும் தோன்றாக் கவிபோல
இமைக்காமல் வாய்பிளந்து நின்றிருந்த அத்தருணம்
இப்போது நினைவுக்கு வருவதும் தான் ஏனோ?

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home