கற்பனை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரமதிகம்
பள்ளி வகுப்பறையில் ஐயா சொன்னார்
அறவே இல்லை என்று சொன்னது
சுவற்றில் தொங்கிய அழகிய நாள்காட்டி
வெண்மைக்கும் கருமைக்கும் பூசலென்றார்
ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும்
ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்றன
பாடம் சொன்னவர் விழிகளிரண்டும்
இலைகளின் நிறமோ பச்சை என்றார்
இல்லை என்றன செந்நிற இலைகள்
இலையுதிர் காலத்தில் இங்கிலாந்து தேசத்தில்
பாடப் புத்தகத்தின் பதினைந்தாம் பக்கத்தில்
இயற்கையினும் பரந்த ஒன்று
இல்லை அவன் படைப்பில் என்றார்
இறவாத இயற்கையும் தனக்குமுன் தூசென்று
விஸ்வரூபம் கொண்டது கவிஞனவன் கற்பனை
பள்ளி வகுப்பறையில் ஐயா சொன்னார்
அறவே இல்லை என்று சொன்னது
சுவற்றில் தொங்கிய அழகிய நாள்காட்டி
வெண்மைக்கும் கருமைக்கும் பூசலென்றார்
ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும்
ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்றன
பாடம் சொன்னவர் விழிகளிரண்டும்
இலைகளின் நிறமோ பச்சை என்றார்
இல்லை என்றன செந்நிற இலைகள்
இலையுதிர் காலத்தில் இங்கிலாந்து தேசத்தில்
பாடப் புத்தகத்தின் பதினைந்தாம் பக்கத்தில்
இயற்கையினும் பரந்த ஒன்று
இல்லை அவன் படைப்பில் என்றார்
இறவாத இயற்கையும் தனக்குமுன் தூசென்று
விஸ்வரூபம் கொண்டது கவிஞனவன் கற்பனை
0 Comments:
Post a Comment
<< Home