Tuesday, November 24, 2009

விடைகொடு பூமித்தாயே

மனிதனற்ற உலகிற்கும் உயிர்தான் உண்டோ?
உண்டு...

மனிதனற்ற உலகிற்கும் உயிர்தருவோர் அன்றோ? - நாம்
நிலவினையும் பெண்ணாகப் பார்த்தவர் அன்றோ?

எனினும்...
உலகழியும் நாளொன்று வருமாயின் - வெள்ளை
நிலவிலேனும் மனிதனவன் உலவ வேண்டும் - எரியும்
பூமித்தாயைப் பெண்ணென்று கவிபாட

ஆதலால்...
இன்றே நிலவுக்கு அனுப்பி வைப்போம்
என்னோடு துணையாய் ஓர் பெண்ணழகை

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home