Sunday, March 07, 2010

அரக்கன்

நிலம் போல் பொறுத்தவளைக் கழிவு
ஜலம் போல் நடத்தியதும் அவள்
உளம் மேல் மிதித்தழுத்திக் காயத்
தடங்கள் பதித்ததுவும்...

கிளி போல் பறந்தவளைக் கூண்டுக்
கிளி போல் அடைத்ததுவும் ஆடும்
மயில் போல் இருந்தவளின் உலகை
ஜெயில் போல் மாற்றியதும்...

காதல் எனும் பேர் சொல்லி அவளைக்
காவல் தனில் தான் தள்ளி உயிராய்க்
காதல் செய்த காரிகையை நம்பிச்
சாகச் செய்த பேரரக்கன்...

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home