Friday, May 21, 2010

கவிஞனின் மறுபிறப்பு


ஏங்கித் தவித்த காதலனாய்
தேங்கிக் கிடந்த வலியதனை
போக்க எண்ணிக் கவிபாடி
ஊக்கம் தந்த விசிறிகளால்
ஊற்றென வார்த்தைகள் பொங்கிப்பாய
நூற்றுக் கணக்கில் கவி புனைந்தேன்

அலைபாய்ந்து வானொலியில்
வந்ததென் பாடல்
தொலைக்காட்சிப் பெட்டியிலும் ஒலித்ததென் பாடல்
காதலதன் சோகத்தைப் பாட்டெழுத
ஞாலமதில் நானொருவன் தானுண்டாம்
இரகசியமாய்ச் சொல்லத் தேவையில்லை
இரசிகர்கள் கோடானு கோடியென்று

மை நிரப்பியாயிற்று
தாள்களும் மேஜையின்மேல்
எட்டு வருடம் காத்திருந்தும்
மொட்டு விடாத காதலொன்றை
மெட்டுக்கு ஏற்றார்போல
பாட்டாக்கித் தரவேண்டும்

வார்த்தைகளின் ஊற்றெங்கே?
நெஞ்சடைக்கும் சோகமெங்கே?
இயக்குநருக்குத் தெரிந்திருக்காது
நேற்று நீ சொன்ன வார்த்தை
ஊக்கம் தந்தவள் நீதான், இரசிகரில்லை
ஏக்கம் சொல்லும் கவிதையும் இனியில்லை

Labels:

0 Comments:

Post a Comment

<< Home