தாசனின் தாசி
அவன் சொல்கிறான் என்னிடம்...
அழகுக்கோர் இலக்கணம்
ஆருயிரின் திருமுகம்
இதழ் சிந்தும் மந்தகாசம்
ஈர்த்திழுக்கும் ஒரு காந்தம்
உறங்காது பேசிடும் மான்விழி
ஊடல் மறந்த காதல் மொழி
எழில் மேனிக்கிணை சொல்ல
ஏழுலகில் எவளுமல்ல
...பார்வதிக்குப் புகழாரம் சூட்டுகிறான் அவன்
கண்ணீரை மடை தாண்ட விடாமல் மடக்கி
மனமாரக் கேட்கின்ற இவள் சந்திரமுகி.
அழகுக்கோர் இலக்கணம்
ஆருயிரின் திருமுகம்
இதழ் சிந்தும் மந்தகாசம்
ஈர்த்திழுக்கும் ஒரு காந்தம்
உறங்காது பேசிடும் மான்விழி
ஊடல் மறந்த காதல் மொழி
எழில் மேனிக்கிணை சொல்ல
ஏழுலகில் எவளுமல்ல
...பார்வதிக்குப் புகழாரம் சூட்டுகிறான் அவன்
கண்ணீரை மடை தாண்ட விடாமல் மடக்கி
மனமாரக் கேட்கின்ற இவள் சந்திரமுகி.
0 Comments:
Post a Comment
<< Home