Friday, May 28, 2010

ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்...


வீடெல்லாம் சுகந்த வாசம்
பூக்களங்கே சந்தனமிங்கே
ஊதுபத்தியின் நறுமணமோ
படர்ந்திருந்தது ஆங்காங்கே

ஆரவாரப் பேச்சுகளும்
ஆர்ப்பரிக்கும் உறவுகளும்
ஆட்டம் போட்டபடியாய்
ஆசைக் குழந்தைகளும்

தலையெல்லாம் தானாக
அவள்பக்கம் திரும்பிக்கொள்ள
அழகான தேவதையாய்
என்னவள் அதோ அங்கே!

உள்ளங்கையின் உள்ளுக்குள்ளே
பொக்கிஷமாய் அது!
காலம் காலமாய்
நானவளைக் கேட்டது!

நெருங்கி எந்தன் அருகில் வந்து
நெஞ்சின் மேல் அதனை வைத்து
நெற்றியிலே முத்தமிட்டு
நெகிழ வைத்தாள் அனைவரையும்

இருக்கையிலே இல்லையென்றாள்
இறந்திருக்க இதோவென்றாள் - அவள்
இமையைக் கண்ணீர் கடக்க - என்
இமைகள் மூடி மறைந்தாள்.

Labels: , , ,

Friday, May 21, 2010

கவிஞனின் மறுபிறப்பு


ஏங்கித் தவித்த காதலனாய்
தேங்கிக் கிடந்த வலியதனை
போக்க எண்ணிக் கவிபாடி
ஊக்கம் தந்த விசிறிகளால்
ஊற்றென வார்த்தைகள் பொங்கிப்பாய
நூற்றுக் கணக்கில் கவி புனைந்தேன்

அலைபாய்ந்து வானொலியில்
வந்ததென் பாடல்
தொலைக்காட்சிப் பெட்டியிலும் ஒலித்ததென் பாடல்
காதலதன் சோகத்தைப் பாட்டெழுத
ஞாலமதில் நானொருவன் தானுண்டாம்
இரகசியமாய்ச் சொல்லத் தேவையில்லை
இரசிகர்கள் கோடானு கோடியென்று

மை நிரப்பியாயிற்று
தாள்களும் மேஜையின்மேல்
எட்டு வருடம் காத்திருந்தும்
மொட்டு விடாத காதலொன்றை
மெட்டுக்கு ஏற்றார்போல
பாட்டாக்கித் தரவேண்டும்

வார்த்தைகளின் ஊற்றெங்கே?
நெஞ்சடைக்கும் சோகமெங்கே?
இயக்குநருக்குத் தெரிந்திருக்காது
நேற்று நீ சொன்ன வார்த்தை
ஊக்கம் தந்தவள் நீதான், இரசிகரில்லை
ஏக்கம் சொல்லும் கவிதையும் இனியில்லை

Labels:

Tuesday, May 11, 2010

இழந்ததும் உணர்ந்ததும்

காதலைக் கண்டிராத மானிடா!- நீ

எதனை இழக்கிறாய் என்பதறியாய்
தெரிந்துகொள்ள நாட்டமிருப்பின்
காதலில் உள்ளவனைக் கேள்
தெரியாதது இல்லையென்றாகக்
காதலைக் கொன்றவனைக் கேள்

Labels: ,