Tuesday, February 05, 2008

காற்றாடி

முடிவறியா நீல வானிலே
காற்றாடியாய் நான்...

கீழிருந்து ஆட்டிப் படைக்கும் நீ
என் காதல் கன்னி மான்

காற்றாக என் உறவுகளும்
நூலாக நம் காதலும்

காதலின் ஒரு முனையில் நீயும்
மறு முனையில் நானும்

என்னை உயர்த்துவதில் முனைப்பாய் நீ
நம் இடைப்பட்ட தூரம் பெருகுவதும் அறியாமல்...

உலகெல்லாம் என்னை காணச் செய்தாய்
உலகாளும் மமதை கொண்டேன்

காதலின் மேல் முனையில் நானும்
கீழ் முனையில் நீயும்

இன்னும் என்னை உயர்த்திக்கொள்ள நான் விழைகையில்
தடையாய் நம் காதல்

நூல் தீர்ந்ததென்று கை விட்டாய் என்னை
இப்பொழுது காற்று சொன்னபடி ஆடுகிறேன்...

உனக்குத் தான் முதல் அழைப்பிதழ்
மனைவியாகப் போகிறாள் என் முறைப்பெண்
வாழ்த்த வருவாயா?

Labels: ,