Monday, October 26, 2009

பிறவிக்கடன்

களங்கமில்லா வெண்ணிலவும்
சுட்டெரிக்கா கதிரவனும்
வாடிவிடா மலரினமும்
வாசமிக்க நன்னீரும்
இல்லாமல் செய்ததது
இறைவனவன் தன்குற்றம்

சினங்கொண்ட உள்ளமதும்
புறம்பேசும் வாயதுவும்
வெட்கிநிற்கும் பார்வையதும்
வீழ்ச்சிகாணும் மானமதும்
இல்லாமல் செய்வதுவே
இப்பிறப்பின் உள்ளர்த்தம்

Labels: ,

Saturday, October 17, 2009

தீ பா வளி நல் வாழ்த் து கள்!

தீமைகளைச் சுட்டுப்
பாசத்தைப் பெருக்கி
வளியிலணையா விளக்காய்
நல்ல மனங்கொண்டு
வாழ்த்தி வளந்தந்து
துள்ளும் இதயங்களுக்கு
கள்ளம் துளியுமில்லா...

...தீபாவளி நல்வாழ்த்துகள்!

Labels: ,